நடுக்கடலில் படகு பழுது: 4 மீனவர் தப்பினர்

புதுச்சேரி அடுத்த பனித்திட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அமுத பாலன். இவருக்கு சொந்தமான மீன்பிடிப் படகில் அதே கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (49), சுகன் (50), தர்மராஜ் (38), கலைமாறன் (35) ஆகியோர் நேற்று முன்தினம் மாலை தேங்காய்த் திட்டு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றனர்.

இரவில் திடீரென படகின் அடிப் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு கடல் நீர் புகத் தொடங்கியது. இதையடுத்து, மீனவர்களின் கடும் முயற்சிக்கு பின் நரம்பை கடற்கரையில் படகு கரை ஒதுங்கியது. இதுகுறித்து படகின் உரிமையாளர் அமுதபாலன் கூறும் போது: ‘‘நடுக்கடலில் படகின் அடிப் பகுதியில் திடீரென உடைப்பு ஏற் பட்டது. கடும் போராட்டத்துக்கு பிறகே நரம்பரையில் கரை ஒதுங்க முடிந்தது என்றார்’’.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE