ஆந்திர நிறுவனம் நிர்வகிக்கும் சுங்கச் சாவடி மீது தாக்குதல்

திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி அருகே சுங்கச் சாவடி உள்ளது. இந்த மையத்தில் வாக னங்களுக்கு கட்டணம் வசூலிக் கும் உரிமையை ஆந்திராவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் ஆந்திரா வில் செம்மரக் கடத்தல் கும்பல் எனச் சொல்லி அம்மாநில போலீ ஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழக கூலித் தொழிலாளர்களின் மரணத்துக்கு நியாயம் கேட்டு, ஒரு மர்ம கும்பல் இந்த சுங்கச் சாவடியை நேற்று அதிகாலை அடித்து நொறுக்கியது.

அந்த கும்பலில் சுமார் 20 பேர் இருந்தனர். அனைவரும் துணி யால் முகத்தை மூடியபடி சுங்கச் சாவடியை அடித்து நொறுக்கினர் என அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்தனர். “மரங்களுக்கு இருக்கும் மரியாதை மனித உயிர்களுக்கு இல்லையா?” என எழுதப்பட்டிருந்த துண்டுப் பிரசுரங்களை மர்ம கும்பல் அங்கு வீசிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE