தமிழகத்தில் மழை நீடிக்கும்

By செய்திப்பிரிவு

காற்று மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெய்து வரும் மழை, மேலும் 24 மணி நேரத்துக்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 15 செ.மீ. மழை பெய்தது. காஞ்சிபுரம் மாவட்டம் தரமணியில் 12 செ.மீ., திருப்பூர் மாவட்டம் தாராபுரம், தேனி மாவட்டம் அரண்மனைபுதூர் ஆகிய இடங்களில் 11 செ.மீ., சென்னை மீனம்பாக்கம், மதுரை மாவட்டம் திருமங்கலம், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, ஈரோடு ஆகிய இடங்களில் 10 செ.மீ., நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம் ஆகிய இடங்களில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. இது தவிர மேலும் பல மாவட்டங்களில் பரவலாக மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும் பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE