மத்திய அரசு விரைவில் அறிவிப்பு: குறைந்த விலையுள்ள மருந்துகளை மக்களிடம் கொண்டும் செல்லும் திட்டம் - மருந்துகள் துறை செயலாளர் தகவல்

குறைவான விலையுள்ள ஜெனரிக் மருந்துகளை மக்களிடம் கொண்டு செல்லும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்று மத்திய மருந்துகள் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் கூறியுள்ளார்.

கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா (சிஏஐ )சார்பில் “மருந்துகள் விலை நிர்ணய ஆணையமும் - நுகர்வோரும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம், அண்ணா மேலாண்மைக் கழகத்தில் நேற்று நடந்தது. சிஏஐ தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் நிர்மல் தேசிகன் கருத்தரங்குக்கு தலைமை தாங்கினார். தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையத்தின் தலைவர் இஞ்செட்டி னிவாஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய மருந்துகள் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

இந்த கருத்தரங்கில் வி.கே.சுப்புராஜ் பேசியதாவது:

மருந்துகளில் பிராண்டட், ஜெனரிக் என இரண்டு வகைகள் உள்ளன. குறைவான விலையுள்ள ஜெனரிக் மருந்துகள், பிராண்டட் மருந்துகளாக மாற்றப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படு கிறது. 50 சதவீதம் டாக்டர்கள் நோயாளிகளுக்கு குறைவான விலையுள்ள ஜெனரிக் மருந்து களை எழுதுவதில்லை. விலை அதிகமுள்ள பிராண்டட் மருந்து களைத்தான் எழுதுகின்றனர். இதனால் சர்க்கரை, எச்ஐவி உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.

மற்ற நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்வதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் மதிப் புள்ள மருந்துகளை பல்வேறு நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. குறைவான விலையுள்ள மருந்துகளை மக்களிடம் கொண்டு செல்லும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்க இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்