தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுக்கு இடையே எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், பல்வேறு கட்சிகள் கூட்டணிக்காக ஒன்று சேரும் போது இது போன்ற சிறு தடங்கல்கள் வரலாம் என தெரிவித்தார்.
தொகுதிப் பங்கீடு தொடர்பான முடிவு வெளியாவதற்கு முன்னரே விஜயகாந்த் நேற்று 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார். இது பாஜகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், தமிழகத்தில், கூட்டணி கட்சிகளுக்கிடையேயான தொகுதிப் பங்கீடு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தமிழக பாஜக தெரிவித்துள்ளது.