தாம்பரம் - செங்கல்பட்டு மின் ரயில் சேவையில் மாற்றம்

By செய்திப்பிரிவு

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தாம்பரம் செங்கல்பட்டு இடையே ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்க இருக்கிறது. இதற்காக வரும் 16-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையில் சில மின்சார ரயில் சேவையில் சிறிய மாற்றம் செய்யப்படவுள்ளது.

அதாவது, வார நாட்களில் சென்னை கடற்கரையில் இருந்து (மதியம் 12.30, 1.09, 1.47) புறப்பட்டு செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல், செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு புறப்படவேண்டிய (மதியம் 1.50, 2.25, மாலை 3.05) மின்சார ரயில்கள் தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு இயக்கப்படும்.

ஞாயிறு நாட்களில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் (மதியம் 12, 12,30, 1.15) ஆகிய மின்சார ரயில்கள் தாம்பரம் வரையில் இயக்கப்படும். அதேபோல், செங்கல்பட்டில் இருந்து புறப்பட வேண்டிய (மதியம் 1.50, 2.25, மாலை 3.05) மின்சார ரயில்கள் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும்.

மேலும், சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.50க்கு புறப்பட்டு திருமால்பூர் செல்ல வேண்டிய மின்சார ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

அதுபோல், திருமால்பூரில் இருந்து மதியம் 1.45க்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு புறப்பட்டு வரும்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்