மதுக்கடைகளுக்கு பதிலாக மலிவு விலை புத்தகக் கடை: தமிழக அரசுக்கு தமிழிசை கோரிக்கை

மதுக்கடைகளுக்கு பதிலாக மலிவு விலை புத்தகக் கடை நடத்த முன்வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாஜக சார்பில் சர்வதேச மகளிர் தின விழா நிகழ்ச்சி, சென்னை - தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது.

இதில், கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், செய்தியாளர்களிடம் கூறியது:

"தமிழக அரசு நடத்தி வரும் மதுக்கடைகளுக்கு பதிலாக மலிவு விலை புத்தகக் கடை போன்றவைகளை நடத்த முன்வர வேண்டும். அடுத்த மகளிர் தினத்துக்குள் தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூட தமிழக அரசும், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர், இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளது, வரலாற்று சிறப்புக்குரியது. இதனால், அங்குள்ள தமிழர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும். பிரதமர் மோடியின் பயணம் இருநாட்டுகளுக்கு இடையேயான நல்லுறவை புதிய உச்சத்துக்கு எடுத்துச்செல்லும்" என்றார் தமிழிசை.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்