நெல்லை, தூத்துக்குடி மாவட் டங்களின் எஸ்.பி.க்கள் உள்ளிட்ட 8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக உள்ள எம்.துரை சிவகங்கை மாவட்டத்துக்கும் சிவகங்கை எஸ்.பி. அஸ்வின் எம்.கோட்னிஸ் தூத்துக்குடி மாவட்டத்துக்கும் மாற்றப்பட் டுள்ளனர். அதேபோல திருநெல் வேலி மாவட்ட எஸ்.பி.யாக உள்ள கே.எஸ்.நரேந்திரன் விழுப்புரம் மாவட்டத்துக்கும் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.யான வி.விக்ரமன் திருநெல்வேலி மாவட்டத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாவட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக இருந்த எஸ்.சாந்தி, சென்னை மத்தியப் புலனாய்வுப் பிரிவு எஸ்.பி.யாகவும், அந்தப் பதவியில் இருந்த என்.தேவராணி, சென்னை மாவட்ட போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு எஸ்.பி.யாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் விழுப்புரம் மண்டல டிஐஜியாகவும், விழுப் புரம் மண்டல டிஐஜி எஸ்.முருகன் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராகவும் மாற்றப் பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப் பட்டுள்ள எஸ்.முருகனுக்கு நெல்லை மண்டல டிஐஜி பொறுப்பும் கூடுதலாக கொடுக் கப்பட்டுள்ளது. இந்த மாற்றங் களுக்கான உத்தரவை தமிழக உள்துறை முதன்மைச் செயலர் அபூர்வ வர்மா வெளியிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago