நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்தத்தை வாபஸ் பெறும் வரை போராடுவோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
நிலம் கையகப்படுத்துதல் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி, பாமக சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமதாஸ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:
பாஜக அரசை எதிர்த்து நடத்தும் போராட்டமாக இந்த ஆர்ப்பாட்டத்தை கருதக்கூடாது. பாஜக அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்த மசோதாவை கடுமையாக எதிர்க்கிறோம். இந்தச் சட்டம் கொண்டுவந்தால் ஆங்கிலேயர் கொண்டு வந்த சட்டத்தைவிட இது கொடுமையான சட்டம். இதற்காக அவசரச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்ற முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.
இந்தச் சட்டத்தை வாபஸ் பெறும் வரை தொடர்ந்து போராடுவோம். மக்களின் பிரதான பிரச்சினைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுப்போம். நாங்கள் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறோம். மாநிலத்தில் முதல்வர் வேட்பாளரை அறிவித்து இருக்கிறோம். எங்கள் தலைமை யில்தான் கூட்டணி அமையும்.
இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago