தமிழக மீனவர்களின் படகுகளை சேதப்படுத்திய இலங்கை கடற்படை

By செய்திப்பிரிவு

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகுகளையும், வலைகளையும் இலங்கை கடற்படை சேதப்படுத்தி யதாக கரைக்குத் திரும்பிய ராமேசு வரம் மீனவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 25-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை 5 நாட் களுக்கு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தமிழக மீன்வளத் துறை தடை விதித்தது.

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா நிறைவு பெற்றதைத் தொடர்ந்து திங்கள்கிழமை ராமேசு வரத்தில் இருந்து 500-க்கும் மேற் பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத் துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற னர். செவ்வாய்க்கிழமை அதிகாலை கச்சத்தீவுக்கு அருகே ராமேசு வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை யினர், படகுகளின் வலைகளை அறுத்து சேதப்படுத்தி கடலில் மூழ் கடித்தனர். ஒரு விசைப்படகை சேதப் படுத்தியதாகவும் ராமேசுவரம் மீனவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இலங்கை கடற்படைக்கு அஞ்சி ராமேசுவரம் மீனவர்கள் பெரும்பாலானோர் குறைந்த மீன்பாடுகளுடன் கரைக்குத் திரும்பினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

6 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்