அரசு மருந்தாளுநர்கள் தடையை மீறி உண்ணாவிரதம்

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருந்தாளுநர்களுக்கு 5 கட்ட பதவி உயர்வு வழங்கக்கோரி, 200-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர்கள் தடையை மீறி டிஎம்எஸ் வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர் 5 நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று தொடங்கினர். சங்கத்தின் மாநிலத் தலைவர் வீ.கோவிந்தராஜ் தலைமையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பொதுச்செயலாளர் ம.தேவேந்திரன், பொருளாளர் உ.சண்முகம் மற்றும் 200-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர்கள் பங்கேற்றனர்.

இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் வீ.கோவிந்தராஜ் கூறியதாவது:

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருந்தாளுநர்களுக்கு 5 கட்ட பதவி உயர்வு அளிக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுநர்களின் பணி நேரத்தை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை என நிர்ணயிக்க வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மாவட்ட காச நோய் மையங்களில் பணிபுரியும் மருந்தாளுநர்களுக்கு ஒரு மாதம் கட்டாய விடுப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.

இவ்வாறு கோவிந்தராஜ் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்