மூலக்கடை மேம்பாலம் திறப்பு எப்போது? - பேரவையில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் விளக்கம்

By செய்திப்பிரிவு

வியாசர்பாடி ரயில்வே மேம் பாலம், மூலக்கடை மேம்பாலம், போரூர் மேம்பாலம் ஆகியவை குறித்து பேரவையில் நேற்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம் அளித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, அதிமுக உறுப்பினர் டாக்டர் வி.எஸ்.விஜய் எழுப்பிய கேள்விக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சட்ட மன்ற கட்சித் தலைவர் அ.சவுந்தரராசன், உறுப்பினர் பீமாராவ் எழுப்பிய துணைக் கேள்விகளுக்கும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அளித்த பதில் வருமாறு:

வேலூர் சி.எம்.சி. அருகே மேம்பாலம் கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாராக உள்ளது. இப்பாலம் கட்டுவதற்காக திட்ட மிடப்பட்டுள்ள பகுதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள் ளது. அதனால் மத்திய அரசிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப் பப்பட்டிருக்கிறது. அந்த அனுமதி கிடைத்ததும் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங் கும்.

வியாசர்பாடி ரயில்வே மேம்பாலம் “ஒய்” வடிவத்தில் 3 பிரிவுகளாக அமைக்கப்படுகிறது. இதில் இரு பிரிவுகளின் பணி முடிந்துள்ளது. முதலில் வியாசர்பாடி பேசின்பிரிட்ஜ் பகுதி போக்குவரத்துக்காக திறந்துவிடப்படும். மூலக்கடை மேம்பாலத்தில் பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டன. அந்தப் பாலம் வரும் ஜூன் மாதம் போக்குவரத்துக்காக திறந்துவிடப்படும்.

போரூர் மேம்பாலம்

போரூர் மேம்பாலத்துக்கு ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப் பட்டதும் பணிகள் தொடங்கப்படும் என்றார் அமைச்சர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்