‘கத்தி’ பட வழக்கு விசாரணை: ஏப்.15-க்கு ஒத்திவைப்பு

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு ராஜசேகர். இவர், தான் எடுத்த ‘தாகபூமி’ என்ற குறும்படத்தை, திரைப்படமாக வெளியிடுவதற்கு முன்னதாக, இப்படத்தை ‘யு டியூபில்’ வெளியிட்டிருந்தாராம்.

இந்நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இதே கதையை அடிப்படையாக வைத்து ‘கத்தி’ என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து வெளியிட்டதாகவும், இப்படத்தை தடை செய்ய வேண்டும், இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், நடிகர் விஜய் ஆகியோர் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று கோரி, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிச.22-ல் அன்பு ராஜசேகர் வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, விசாரணையை ஏப்.15-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி எம்.என்.முகமது அலி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE