எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ளுவோம் என்ற இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பேச்சை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.
''எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ளுவோம் என்ற இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பேச்சை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இலங்கை பிரதமரின் பேச்சு திட்டமிட்டு பெரிதுபடுத்தப்படுகிறது
பிரதமர் மோடியின் பயணம் குறித்து ஆலோசனை நடத்த இலங்கையில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் , 13-ம் தேதி சுற்றுப் பயணம் செல்ல உள்ள பிரதமர் மோடி ஆகிய இருவரும் தமிழக மீனவர் பிரச்சினைக்கு முடிவு காண்பார்கள்.
எனவே, இடைப்பட்ட பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், பேச்சுவார்த்தைக்குப் பிறகு வரும் முடிவுக்கு முக்கியத்துவம் தருவோம்.'' என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ள தயங்க மாட்டோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கரமசிங்கே கூறியிருந்தார்.
ரணில் பேச்சுக்கு பல தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்நிலையில், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேச்சு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago