ஐஆர்என்எஸ்எஸ்-1டி: செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தும் பணி வெற்றி

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட ஐஆர்என்எஸ்எஸ்-1டி செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்துவதற்கான முதல்கட்ட பணி வெற்றி பெற்றுள்ளது.

கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்துள்ளது. இந்த வரிசையில் ஏற்கெனவே 3 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. 4-வதாக ஐஆர்என்எஸ்எஸ்-1டி என்ற செயற்கைக்கோள் கடந்த 28-ம் தேதி மாலை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. கடல் பகுதிகளின் பாதுகாப்பு, இயற்கை சீற்றம், திசை அறிதல் உள்ளிட்ட ஜிபிஎஸ் பணிகளை இது மேற்கொள்ளும்.

இந்நிலையில், இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளத் தில், ‘‘ஐஆர்என்எஸ்எஸ்-1டி செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்துவதற்கான முதல் கட்ட பணிகள் வெற்றி பெற்றுள்ளன. செயற்கைக் கோளில் பொருத்தப்பட்டிருந்த அப்போஜீமோட்டார் 29-ம் தேதி மாலை 5.28 மணி அளவில் செயற்கைக்கோளில் இருந்து விடுபட்டது’’ என்று கூறப்பட்டுள்ளது. இத்தகவலை இஸ்ரோ அதிகாரிகளும் நேற்று உறுதிப்படுத்தினர்.

ஐஆர்என்எஸ்எஸ்-1இ, 1எஃப், 1ஜி ஆகிய செயற்கைக் கோள்களை இந்த நிதியாண்டு இறுதிக்குள் விண்ணில் செலுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்