கிருஷ்ணகிரி வங்கிக் கொள்ளையில் மேலும் ஒருவர் சிக்கினார்

கிருஷ்ணகிரியை அடுத்துள்ள ராமாபுரத்தில் பாங்க் ஆஃப் பரோடா வங்கி குந்தாரப்பள்ளி கிளையில் கடந்த 24-ம் தேதி நுழைந்த மர்ம நபர்கள், ரூ.12 கோடி மதிப்புள்ள 6038 பவுன் தங்க நகைகளைக் கொள் ளையடித்துச் சென்றனர். வங்கிக் கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக் கப்பட்டு, வடமாநிலங்களில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், குந்தாரப்பள்ளி, குரு பரப்பள்ளி, வேப்பனப்பள்ளி ஆகிய பகுதியில் உள்ள செல்போன் கோபுரங்கள் மூலம் கடந்த நவம்பர் மாதம் முதல் வடமாநிலங்களுக்கு அழைக் கப்பட்ட எண்களின் விவரங் களை சேகரித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளை கும்பல், இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்நிலையில், வங்கிக் கொள்ளையில் தொடர்புடைய உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஷாநவாஸ் (49) என்பவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, மீண்டும் விசாரணைக் காக 12 நாள் காவலில் எடுத்து, டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். இதனிடையே மேலும் ஒரு கொள்ளையனை உத்தரப்பிரதேச மாநிலத்தில் மற்றொரு தனிப்படை போலீஸார் பிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரை இன்னும் ஓரிரு நாளில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்