வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் களப் பணி: திருவள்ளூரில் நாளை தொடக்கம்

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று, வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் களப் பணி திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (25-ம் தேதி) தொடங்குகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை தொடங்கும் இந்தக் களப் பணியில், மாவட்டத் தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதி களுக்கு உட்பட்ட 3,052 வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் தங்கள் பகுதியில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று, வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் அட்டை எண் விவரங்களைப் பெற்று, வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை சேர்க்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.

வாக்காளர்கள், தங்களது வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் அட்டை நகலினை தயாராக வைத்திருந்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்கவும், நீக்கவும் மற்றும் திருத்தம் செய்யவும் விரும்பும் வாக்காளர்கள் அதற்குரிய படிவத்தினை பூர்த்தி செய்து, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிக்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE