2016ல் பாமக ஆட்சிஅமைக்கும்போது பூரண மதுவிலக்கை அமல்படுத்தும்: அன்புமணி ராமதாஸ் பேச்சு

2016ல் பாமக ஆட்சி அமைக்கும். அப்போது பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதுதான் முதல் கையெழுத்தாக இருக்கும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பாமக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி பேசினார்.

''தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டுமென்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால், ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. வரும் 2016-ல் ஆட்சி மாறும் பாமக ஆட்சி அமைக்கும். அப்போது முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் கையெழுத்தாக இருக்கும்.

நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை வரும் 17-ம் தேதி மூட வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடாவிட்டால் பொதுமக்களின் ஆதரவோடு நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை 18-ம் தேதி முதல் நாங்களே இழுத்து மூடும் போராட்டங்களை நடத்துவோம்'' என்று அன்புமணி தெரிவித்தார்.









VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்