தமிழகத்தில் பாஜக பலவீனம் அடையவில்லை என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஸ்ரீரங்கத்தில் வெற்றி பெற்ற கட்சியும், டெபாசிட் பெற்றுள்ள கட்சியும் அதிக பணம் செலவிட்டன.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவை வருங்காலத் தேர்தலுக்கான அள வீடாக கருத முடியாது. பாஜக பெற் றிருக்க வேண்டிய ஓட்டுகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும். தேர்தலுக்குப் பின்னும் சொல்கிறேன். பாஜக ஓர் மாற்று சக்திதான்.
இந்தத் தேர்தலில் பாஜக வாங்கிய வாக்குகள் உண்மையின் குறியீடு இல்லை. அதிமுக சார்பில் வெற்றிபெற்ற வளர்மதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாங்கிய வாக்குகளைவிட அதிகம் வாங்கியிருக்கிறார். அப்படியென்றால் முன்னாள் முதல்வரைவிட வளர்மதி அதிகம் பலமானவரா?
தமிழகத்தில் பாஜக பலவீனமடைந்துவிட்டது என்பதை நான் மறுக்கிறேன். திராவிடக் கட்சிகளுடன் களத்தில் நிற்கக் கூடிய கட்சி நாங்கள் என்பதை உள்ளாட்சி இடைத் தேர்தலுக்குப் பின்னர் மறுபடியும் நிரூபித்திருக்கிறோம். எங்கள் பலத்தை வருங்காலத்திலும் நிரூபிப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago