பெண் விவகாரத்தால் மோதல்: ரவுடி கொலையில் 7 பேர் சிக்கினர்

By செய்திப்பிரிவு

எழும்பூரில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் செந்தில்(35). இவருக்கு திருமணமாகி இரு மகள்கள் உள்ளனர். எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் 9-ம் தேதி இரவு மது அருந்திய செந்திலை 7 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொன்றது. கொலை சம்பவங்கள் எதிரே உள்ள ஓட்டலில் இருந்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன. சைதாப்பேட்டை, வடபழனி பகுதிகளைச் சேர்ந்த ஜான்சன்(26), பாபு(25), ரமேஷ்(23), சதீஷ்(28), கார்த் திக்குமார்(28), அருண்(30), சந்த்ரு(25) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் எழும்பூர் காவல் ஆய்வாளர் மதியரசு விசாரணை நடத்தி வருகிறார். கொலைக்கான காரணம் குறித்து எழும்பூர் போலீஸார் கூறுகையில், "கொலை செய்யப்பட்ட செந்திலும், கைது செய்யப்பட்டுள்ள ஜான்சனும் சிறையில் நண்பர்களாக இருந்துள்ளனர். முதலில் விடுதலையாகி வெளியே வந்த செந்தில். ஜான்சனின் காதலியுடன் தவறான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. சில நாட்களில் ஜான்சனும் விடுதலையாகி வெளியே வந்ததும் செந்திலுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது கர்ப்பமாக இருக் கும் ஜான்சனின் தங்கையையும், ஜான்சனையும் கொலை செய்வேன் என்று செந்தில் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜான்சன் தனது நண்பர்களுடன் இணைந்து செந்திலை கொலை செய்து இருக்கிறார்" என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

21 secs ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்