பிஎஸ்என்எல் முறைகேடு: சன் டிவி ஊழியர்களின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு

By செய்திப்பிரிவு

பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் சன் டிவி ஊழியர்களின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப் பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளிவைத்தது.

மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, அவரது வீட்டில் 323 பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இவ்வழக்கில், தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச் செயலாளர் வி.கவுதமன், சன் டிவி முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், எலக்ட்ரீஷியன் எல்.எஸ்.ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

இந்நிலையில், தங்களை ஜாமீனில் விடுவிக்கக்கோரி மூவ ரும் இரண்டு முறை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய் தனர். அந்த மனுக்களை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.கிருஷ்ணமூர்த்தி தள்ளுபடி செய்தார். இதையடுத்து, தங்க ளுக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர்கள் மனுத்தாக்கல் செய்தனர். உயர் நீதிமன்ற நீதிபதி பி.தேவ தாஸ் முன்னிலையில் இருதரப்பு வாதங்கள் முடிந்தது. அதைத் தொடர்ந்து இவ்வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி தேவதாஸ் நேற்று உத்தர விட்டார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்