தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு வீட்டில் வருமான வரி சோதனை

திரைப்படத் தயாரிப்பாள ரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான கலைப்புலி எஸ்.தாணு வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்

சில மாதங்களுக்கு முன்பு கலைப்புலி எஸ்.தாணு வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது. அப்போது அதிகாரிகள் சில ஆவணங்களை கைப்பற்றிச் சென்றனர். இந்நிலையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கற்பகம் அவென்யூவில் உள்ள தாணுவின் வீட்டிலும், தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதி காரிகள் நேற்று மாலை சோதனை நடத்தினர்.

ஏற்கெனவே நடந்த சோதனைகளின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங் களில் உள்ள விவரங்கள் குறித்து விளக்கம் கேட் பதற்காகவும், வருமான வரி கணக்குகளை சரி யாக தாக்கல் செய்கிறாரா என்பதை அறியவும் இந்த சோதனை நடத்தப் பட்டதாக கூறப்படுகிறது. அண்மையில் நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE