சிபிசிஎல் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு

இந்தியன் ஆயில் குழுமத்தைச் சேர்ந்த சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிறுவன இயக்குநர் (டெக்னிகல்) பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள யு.வெங்கடரமணா (56) நேற்றுமுன்தினம் பொறுப்பேற்றுக்கொண்டார். டி.எஸ்.ராமச்சந்திரனின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து இவர் இந்த பொறுப்பை ஏற்றுள்ளார்.

கரக்பூர் ஐஐடி-யில் முதுநிலை பட்டம் பெற்ற யு.வெங்கடரமணா இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பல்வேறு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் 30 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமிக்கவர்.

புதுடெல்லியில் உள்ள இந்தியன் ஆயில் தலைமை அலுவலகத்தில் இயக்கம், தொழில்நுட்ப சேவைகள், கச்சா எண்ணெய் கொள்முதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்ட அனுபவம் இவருக்கு உண்டு. நிறுவனத்தின் ஆராய்ச்சி மேம்பாட்டு பிரிவில் இவர் பங்கேற்ற குழு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியதற்கான தேசிய விருதை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்