டெல்லி மாநாட்டில் பங்கேற்கவில்லை குருபூஜையில் புதுச்சேரி முதல்வர்

டெல்லியில் நடைபெற்ற முதல்வர் கள் மாநாட்டில் பங்கேற்காமல் பொள்ளாச்சி அருகே உள்ள கோயில் குருபூஜையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டார்.

டெல்லியில் பிரதமர் மோடி தலை மையில் முதல்வர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல் வர்கள் பங்கேற்றனர். ஆனால் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உள்பட ஒரு சில மாநில முதல் வர்கள் பங்கேற்கவில்லை.

பொள்ளாச்சி, வேட்டைக்காரன் புதூரில் உள்ள அழுக்குச் சித்தர் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் குருபூஜை நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான குருபூஜை வழிபாடு நேற்று நடைபெற்றது. இதில் ரங்கசாமி கலந்து கொண்டார்.

முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்காதது குறித்து செய்தி யாளர்கள் கேட்டபோது, அதற்கான விளக்கத்தை பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவித்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE