கல்பாக்கத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் இந்திய அணுமின் கழகத்தின் சென்னை அணுமின் நிலையம் இயங்கி வருகிறது.

இங்கு, தலா 220 மெ.வா., மின்திறன் கொண்ட இரு உற்பத்தி அலகுகள் உள்ளன. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பராமரிப்பு பணிகளுக்காக இந்த இரு யூனிட்டுகளும் ஒருமாதத்துக்கு மின் உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம்.

இதன்படி, பராமரிப்புப் பணிக்காக 2-ம் அலகில் கடந்த மாதம் 21-ம் தேதி முதல் 40 நாட்களுக்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்

அலகிலும் சிறுபராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக நேற்று முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE