உதவி பேராசிரியர்கள் நியமனத்துக்கு நேர்காணல் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1,095 உதவி பேராசிரியர்களை நியமிப்பதற்கான பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது.

ஆங்கிலம், இயற்பியல் உள்பட ஒரு சில பாடங்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு இறுதி தெரிவு பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது.

இந்நிலையில், தமிழ், பொருளா தாரம், புவியியல், வணிகவியல் உட்பட 12 பாடங்களுக்கு வருகிற 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நேர்காணல் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. நேர்காணலுக்கு தகுதி பெற்றவர் களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) பாடவாரியாக வெளியிடப் பட்டுள்ளது.

தனித்தனியே கடிதம்

நேர்காணலுக்கான அழைப்புக் கடிதம் சம்பந்தப்பட்ட விண்ணப்ப தாரர்களுக்கு தனித்தனியே தபால் மூலம் அனுப்பிவைக்கப்படும்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் அழைப்புக் கடிதம் மற்றும் இதர படிவங் களை பதிவிறக்கம் செய்து கொண்டு குறிப்பிட்ட நாளில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி அறிவுறுத்தி யுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்