குவைத் நாட்டில் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது. தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலர் நாகேந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குவைத் நாட்டில் உள்ள இந்திய தொலைதொடர்புத் துறையில் பணிபுரிய 50 வயதுக்கு உட்பட்ட குவைத் நாட்டின் கனரக மற்றும் இலகுரக வாகன நடப்பு ஒட்டுநர் உரிமம் உள்ளவர்கள் மற்றும் குவைத் ஒட்டுநர் உரிமம் புதுப்பிக்கத் தவறிய ஒட்டுநர்கள் தேவைப்படுகிறார்கள்.
தேர்வு செய்யப்படுவோருக்கு தகுதி மற்றும் அனுபவத்துக்கு ஏற்ப ஊதியத்துடன், இலவச விமான டிக்கெட், இருப்பிடம், உணவுப்படி மற்றும் குவைத் நாட்டின் சட்டதிட்டத்துக்கு உட்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், தங்களின் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட், ஒரு புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை, ‘ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகம், புவோர் எண் 42, ஆலந்தூர் சாலை, திரு.வி.க.தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32’ என்ற முகவரியில் உள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நேரில் வழங்கலாம்.
இல்லையெனில், omcresum@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு டிசம்பர் 24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்கள் அறிய 044-22502267 மற்றும் 22505886 என்ற தொலைபேசி எண்களிலும் www.omcmanpower.com என்ற இணையதளத்திலும் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago