மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் கண்டெடுக்கப்பட்ட கையும், காலும் 5 மாதமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பத்திரமாக வைக்கப் பட்டுள்ளன.
சென்னை மவுலிவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டிடம், கடந்த ஜூன் 28-ம் தேதி இடிந்து தரைமட்டமானது. கட்டிட இடிபாடுகளில் இருந்து 61 பேர் சடலமாகவும், 27 பேர் உயிருடனும் மீட்கப்பட்டனர். இதுதவிர ஒரு கையும், காலும் தனியாக கண்டெடுக்கப்பட்டன. இறந்தவர்களின் உடல்கள் அனைத்தும் பிரேதப் பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அடையாளம் காணப்படாத கையும், காலும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனைக் கூடத்தில் பத்திரமாக வைக்கப்பட்டன. இந்தக் கை மற்றும் காலுக்கு யாரும் உரிமை கோரி வராததால், 5 மாதங்களாக மருத்துவமனையிலேயே பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக டாக்டர்கள் கூறும்போது, ‘‘கை மற்றும் காலுக்கு யாரும் உரிமை கோரி வரவில்லை. அவை யாருடையது என கண்டுபிடிக்க டிஎன்ஏ பரிசோதனையும் செய்யப்பட்டது. அதிலும் எந்த பயனும் இல்லை. இந்த கட்டிட விபத்து மிக முக்கியமான சம்பவம் என்பதால் கையையும், காலையும் பாதுகாப்பாக பதப்படுத்தி வைத்திருக்கிறோம்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
8 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago