ஆட்டோக்களில் அதிரடி சோதனை: பொழுதுபோக்கு கருவிகள் பறிமுதல்

தருமபுரி நகரில் இயங்கும் ஷேர் ஆட்டோ உள்ளிட்ட வாகனங் களில் ரேடியோ உள்ளிட்ட பொழுது போக்கு கருவிகள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது.

தருமபுரி நகரில் இயங்கும் ஷேர் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் எஃப்.எம் ரேடியோ, டேப் ரெக்கார்டர் போன்ற பொழுதுபோக்கு கருவிகள் பொருத்தி பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்துவதாக மாவட்ட ஆட்சியர் விவேகானந்தனுக்கு ரகசிய புகார் வந்தது.

எனவே சோதனை மேற்கொள்ளும்படி ஆட்சியர் வட்டார போக்குவரத்து அலுவலர் அசோக்குமாருக்கு உத்தரவிட்டார். இதன்படி நேற்று மாலை 170 ஆட்டோ உள்ளிட்ட பயணிகள் வாகனங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் 12 ஆட்டோக்களில் இருந்த ரேடியா மற்றும் டேப் ரெக்கார்டர் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ஆட்டோ உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்