தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருந்தது. இது நேற்று மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறும்போது,
‘‘கடந்த 2 நாட்களாக தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது.
இதனால் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும். வடதமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்” என்றனர்.
நேற்று காலை 8.30 மணிவரை பதிவான நிலவரப் படி கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத் தில் 2 செ.மீ., நெல்லை மாவட்டம் பாபநாசம், நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி, வேதாரண்யம், மதுரை மாவட்டம் திருமங்கலம் உள்ளிட்ட இடங்களில் 1 செ.மீ. மழை பெய்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago