அம்பத்தூர் தபால் நிலையத்திலிருந்து பார்சல் மூலம் ஹெராயின் கடத்திய நைஜீரிய இளைஞர் சிக்கினார்.
தமிழகத்தில் இருந்து அரசு தபால் நிலையங்கள் மூலம் வெளி நாடுகளுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக, போதைப் பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குநர் பிரேம் ஆனந்த் சின்ஹாவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தபால் நிலையங்கள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டன.
துப்பாக்கி முனையில்
இந்நிலையில் அம்பத்தூர் தலைமை தபால் நிலையத்துக்குள் கருப்பின இளைஞர் ஒருவர் பார்சலுடன் செல்வதை போலீஸார் பார்த்தனர். அவரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து பிடித்து, அவர் வைத்திருந்த பார்சலை திறந்து பார்த்தபோது, அதில் ஹெராயின் இருப்பது தெரிந்தது.
அவரை கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில், அவரது பெயர் ஹென்றி என்பதும், நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. சென்னையில் ஓர் ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேருவதாக வந்து, போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. சென்னையில் இருந்து பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு பார்சல் மூலம் போதைப் பொருட்களை அனுப்பியுள்ளார் ஹென்றி. அவருக்கு எங்கிருந்து போதைப் பொருட்கள் கிடைத்தன என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago