ஆயிரம்விளக்கு பகுதியில் கத்தியால் குத்தி இளைஞர் ஒருவரிடம் பணத்தையும், கோயம்பேட்டில் பெண்ணின் மீது மோட்டார் சைக்கிளால் மோதி செயினையும் மர்ம நபர்கள் பறித்து சென்று விட்டனர்.
சென்னை பாடியை சேர்ந்தவர் ஜெகன் (23). இவர் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி ஜெகனிடம் இருந்த பணத்தை கேட்டனர். அவர் கொடுக்க மறுக்கவே அவரை கத்தியால் குத்தினர். இதில் ஜெகனின் வலது கையில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் வைத்திருந்த செல்போன், ரூ.500 பணத்தை பறித்துக் கொண்டு அனுப்பிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து ஆயிரம்விளக்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணிடம் செயின் பறிப்பு
சென்னை போரூரை சேர்ந்தவர் ரகு. இவரது மனைவி லட்சுமி (48). நேற்று முன்தினம் இரவு இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கோயம்பேடு சென்ற னர். கோயம்பேடு அருகே மேம் பாலத்தில் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ரகுவின் மோட்டார் சைக்கிளில் மோதினர். இதில் நிலைகுலைந்து ரகுவும், லட்சுமியும் கீழே விழுந்தனர். உடனே இடித்த மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த நபர் ஓடி வந்து லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் செயினை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து கோயம்பேடு பேருந்து நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
11 mins ago
தமிழகம்
5 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago