தமிழகத்தில் 2 நாள் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடக்கத்தில், தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. அதன் பிறகு மழையின் அளவு படிப்படியாக குறையத் தொடங்கியது. கடந்த சில தினங்களாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை ஒட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளது. அந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதால், தென்கிழக்கு கடலோரப் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மழையும். சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் வரும் 28-ம் தேதிக்குப் பிறகு, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE