சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

By செய்திப்பிரிவு

ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தவர் சகாயம். இவர் பொறுப் பில் இருந்தபோதுதான், மதுரை மாவட்டத்தில் நடந்த குவாரி முறைகேடுகள் தெரிய வந்தன.

இந்நிலையில் குவாரி முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த, சகாயம் தலைமையில் ஒரு குழுவை அமைத்து விசாரணை நடத்த தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல முறைகேடுகளை அவர் வெளிக் கொண்டுவந்ததால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனால் சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து சகாயத்துக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க டிஜிபி நேற்று காலையில் உத்தரவிட்டார். உத்தரவு வெளியான சிறிது நேரத்திலேயே சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்