சென்னையில் ரூ.24 லட்சம் மோசடி: 2 பேர் கைது

சென்னை கொளத்தூர் ஜவகர் நகர் 6-வது பிரதான சாலையில் வசிப்பவர் அருணாஸ்ரீ. பழைய பேப்பர்களை மொத்தமாக சேகரித்து காகித தொழிற் சாலைகளுக்கு சப்ளை செய்யும் நிறுவனத்தை அப்பகுதியில் நடத்தி வருகிறார். இங்கு மேலாளராக கண்ணன், பணம் வசூலிப்பவராக ஜோனதன் ஹேபர்ட் ஆகியோர் வேலை பார்த்தனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் வேலையை விட்டு நின்றனர்.

இந்நிலையில் கண்ணனும், ஜோனதன் ஹேபர்ட்டும் ஏற்கனவே வேலைபார்த்த நிறுவனத்தின் பெயரில் போலியாக ஒரு நிறுவனத்தை தொடங்கினர். பின்னர் அருணாஸ்ரீயின் நிறுவனத்துக்கு பணம் செலுத்தும் நிறுவனத்திடம் இவர்கள் இருவரும் சென்று பணத்தை வசூல் செய்துள்ளனர். அதை தங்களது நிறுவனத்தின் பெயரில் வரவு வைத்துக்கொண்டனர். இப்படி ரூ.24 லட்சத்தை இவர்கள் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

கண்ணனையும், ஜோனதன் ஹேபர்ட்டையும் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE