ஊர்க்காவல் படையினருக்கு வெள்ளை சீருடை: டிஜிபி முத்துக்கருப்பன் தகவல்

By செய்திப்பிரிவு

சேலம் சரகத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஊர் காவல்படை வீரர்களுக்கு வெள் ளை நிற சீருடைத் திட்டம் விரிவுப்படுத்தப்படும் என டிஜிபி தெரிவித்தார்.

ஊர்க்காவல் படையினரின் பணி தொடர்பான ஆய்வுக்கூட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது. ஊர்க்காவல்படை டிஜிபி முத்துக் கருப்பன் தலைமை வகித்தார். கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊர்க்காவல் படை வீரர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியா ளர்களிடம் டிஜிபி முத்துக்கருப்பன் கூறியதாவது:

தமிழகத்தில் ஊர்க்காவல் படை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஊர்க்காவல் படை வீரர்களுக்காக பழநியில் ரூ.2 கோடி மதிப்பில் பணித்திறன் மேம்பாடு பயிற்சி நிலையம் கட்டப்பட்டு வருகிறது. சேலம் சரகத்தில் உள்ள ஊர்க்காவல் படை வீரர்களுக்கு போக்குவரத்து போலீஸாரின் சீருடை போல் வெள்ளை நிறத்தில் சீருடை வழங்கப்பட்டது. இது வரவேற்பை பெற்றுள்ளதால் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE