தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, கோவையில் மதிமுக சார்பில் மதுவிலக்கு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது. சுந்தராபுரம் உழவர் சந்தையில் தொங்கிய மாரத்தான், மதுக்கரை சந்தை வரை நடைபெற்றது.
பொதுப் பிரிவு, மேல்நிலைப் பள்ளி மாணவர், உயர்நிலைப் பள்ளி மாணவர், மாணவிகள் என நான்கு பிரிவுகளாக இப்போட்டி கள் நடைபெற்றன. போட்டியில், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:
தமிழகத்தில் நடைபெறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை உள்ளிட்ட குற்றச் சம்ப வங்களுக்கு மதுவே காரணம். மதுவினால் வரும் வருமானத் துக்காக மக்களை நரகத்தில் தள்ளுவதை காமராஜர், அண்ணா ஏற்கவில்லை. மதுவினால் தமிழகம் சீரழிய முதல்வர்களாக இருந்த எம்.ஜி. ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர்தான் காரணம்.
மதுவிலக்கு குறித்து மக்களி டையே விழிப்புணர்வை ஏற்படுத் தும் வகையில், கோவையை முன்மாதிரியாகக் கொண்டு பல்வேறு நகரங்களில் மதுவிலக்கு மாரத்தான் போட்டி நடத்த திட்டமிட்டுள்ளோம். மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோரது ஆதரவுடன் மதுக் கடைகளை மூடும் வரை தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றார்.