வாரிசு சான்றிதழ் வாங்குவதற்காக லஞ்சம் வாங்கிய தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வாளரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை தண்டையார்பேட்டை குடிசை மாற்று வாரிய பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி(33).
வாரிசு சான்றிதழ் வாங்குவதற்காக தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை சந்தித்தார் கிருஷ்ணவேணி.
ஆனால் சான்றிதழ் கொடுக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்டிருக்கிறார் ஹரிகிருஷ்ணன். பின்னர் பேரம் பேசி ரூ.25 ஆயிரத்திற்கு சம்மதித்திருக்கிறார். ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத கிருஷ்ணவேணி, லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.
அவர்கள் கொடுத்த ஆலோசனைப்படி ரசாயனப்பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை ஹரிகிருஷ்ணனிடம் கொடுத்தார் கிருஷ்ணவேனி. அதை அவர் வாங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஆதாரத்துடன் அவரை பிடித்து கைது செய்தனர்.