திருத்தியமைக்கப்பட்ட வன்கொடுமை சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்

By செய்திப்பிரிவு

திருத்தியமைக்கப்பட்ட வன் கொடுமை சட்டத்தை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வலியுறுத்தி இந்திய குடியரசுக் கட்சி சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் கூறியதாவது:

நடைபெற்று வரும் நாடாளு மன்ற கூட்டத் தொடரில் 60-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற் றப்படவிருப்பதாக கூறப்பட்டுள் ளது. ரங்கநாத் மிஸ்ரா ஆணையத் தின் பரிந்துரைகளின் அடிப் படையில் திருத்தியமைக்கப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டம் பலமுறை நாடாளுமன்றத்தில் அறி முகப்படுத்தப்பட்டு, விவாதிக் கப்படாமலேயே உள்ளது. இந்தச் சட்டத்தை இந்த கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE