சென்னை கோயம்பேட்டில் இருந்து சபரிமலைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடங்கின.
இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தமிழக அரசு விரைவு போக்கு வரத்து கழகம் சார்பில் ஆண்டு தோறும் சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அந்த வகையில், இந்த ஆண்டும் தமிழகத் தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கத் தொடங்கியுள்ளோம்.
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தினமும் 20 விரைவு பஸ்கள் சபரிமலை செல்கின்றன. பயணிகளின் தேவைக்கு ஏற்ற வாறு பஸ்களை கூடுதலாக இயக்க வுள்ளோம்.
சென்னையில் இருந்து மட்டுமே அடுத்த மாதம் முதல் சுமார் 60 சிறப்பு பஸ்கள் இயக்க வுள்ளோம். விரைவு பஸ்களில் பயணம் செய்ய விரும்புவோர் முன்பதிவு மையங்களிலோ அல்லது (www.tnstc.in) ஆன்லைன் மூலமோ டிக்கெட்களை முன்பதிவு செய்துகொள்ளலாம்’’ என்றார்.