இலங்கை சிறையில் உள்ள 24 மீனவர்களின் காவலை அடுத்த மாதம் 5-ம் தேதி வரை நீட்டித்து ஊர்காவல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 24 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணம் சிறையில் உள்ள இந்த மீனவர்கள் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். 24 மீனவர்களின் காவலை வரும் டிசம்பர் 5-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.