சென்னை - குரோம்பேட்டையில் ஒரு வங்கியின் ஜன்னலை உடைத்து சில்லறை பணத்தை திருடி சென்று விட்டனர்.
சென்னை குரோம்பேட்டை பேருந்து நிலையம் பின்புறத்தில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா உள்ளது. வழக்கம்போல நேற்று காலையில் ஊழியர்கள் வங்கியை திறந்தபோது, வங்கியின் பின்புற பகுதியில் உள்ள ஜன்னல் உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இது குறித்து வங்கி மேலாளர் ஜவஹருக்கு தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து குரோம்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
வங்கியின் லாக்கரை உடைக்க முடியாததால் பெரிய அளவிலான தொகை எதுவும் திருடப்படவில்லை. ஊழியர்கள் வங்கி மேஜை டிராயரில் வைத்திருக்கும் பணங்கள் மட்டும் திருடப்பட்டிருந்தன. போலீசார் விசாரித்து வருகின்றனர்.