பெரம்பூரில் உள்ள கே.ஆர். எம் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், பத்து திருநங்கைகளுக்கு கணினி பயிற்சி அளித்துள்ளனர்.
இந்தப் பயிற்சியில் கணினியில் கடிதம் எழுதுவது, மெயில் அனுப்புவது, எக்செல்லை பயன் படுத்துவது போன்ற பல்வேறு விஷயங்கள் சொல்லிக் கொடுக்கப் பட்டன.
இத்தகவலை பெரம்பூர் கே ஆர் எம் பள்ளியின் தாளாளர் தாயுமானசாமி தெரிவித்தார்.