ஆவடியில் தேசிய நூலக வார விழா

ஆவடி கிளை நூலகத்தில் தேசிய நூலக வார விழா நேற்று நடந்தது.

நூலகமும், வாசகர் வட்டமும் இணைந்து நடத்திய இந்த விழாவில் மாவட்ட நூலக அதிகாரி தனலெட்சுமி, ஆவடி காவல் நிலைய ஆய்வாளர் சிட்டி பாபு, வாசகர் வட்ட தலைவர் லதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில், மாவட்ட நூலக அதிகாரி தனலெட்சுமி பேசியதாவது:

கடந்த 47 ஆண்டுகளாக இயங்கி வரும் ஆவடி கிளை நூலகத்தில் பொது அறிவு நூல்களை வைக்க நூலகத் துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டு வரு கிறது.

நூலகத்துக்கு புதிய கட்டிடம் அமைக்க, வீட்டு வசதி வாரிய பகுதியிலேயே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே, புதிய கட்டிடம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப் பட உள்ளது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE