பாஜகவுடன் திமுக கூட்டணிப் பேச்சு நடத்துவதாக ஊடகங்கள் தான் செய்தி வெளியிடுகின்றன என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சனிக் கிழமை நடந்த தனது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், நிருபர்களிடம் கூறியதாவது:
எனது பிறந்தநாளுக்கு விளம்பர பேனர்கள் வைக்க வேண்டாம் என்று கூறியிருந்தேன். அதை தொண்டர்கள் கடை
பிடித்ததற்கு நன்றி தெரிவிக்கி றேன். அதேநேரத்தில் ஏழை, எளியோருக்கு அதிக அளவில் நலத்திட்ட உதவிகள் அளித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். திமுகவினர் அனைவரும் அரும்பாடுபட்டு, வெற்றியைத் தேடித் தரவேண்டும். பாஜகவுடன் திமுக கூட்டணிப் பேச்சு நடத்துவ தாக ஊடகங்கள்தான் செய்தி வெளியிடுகின்றன. காங்கிரஸுடன் பேசுவதாகவும் கூறுகின்றன. அந்த அளவுக்கு திமுக மீது ஊடகங்கள் பாசமாக உள்ளன.
வேட்பாளர் நேர்காணலில் இளைஞரணிக்கு முன்னுரிமை வழங்க வலியுறுத்தியதாக வெளி யாகும் தகவலுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. இதுபோன்று வியாபார நோக்கத்துடன் வெளி யிடப்படும் செய்திகளுக்கு பதில ளிக்க விரும்பவில்லை.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.