கத்தார் நாட்டில் 11 மீனவர்களுடன் சென்ற விசைப்படகு மற்றொரு படகுடன் மோதி விபத்துக்குள்ளானதில், நாகையைச் சேர்த்த 2 மீனவர்கள் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்தில் காயமடைந்த 9 மீனவர்கள் அங்குள்ள மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலூர், நாகையைச் சேர்ந்த மீனவர்கள் உட்பட 11 பேர் கத்தார் நாட்டு கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக, மற்றொரு படகு இவர்களது விசைப்படகு மீது மோதி விபத்துள்ளானது. இதில் நாகை மாவட்ட மீனவர்கள் 2 பேர் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை மீட்க தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.