வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, புயலாக மாறி புதன்கிழமை அந்தமானை தாக்கிய நிலையில், சென்னை துறைமுகத்தில் இன்று 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அத்துடன், மேலும் கடலில் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னையில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்தவண்ணம் உள்ளது.
இதனிடையே, நாகப்பட்டினம் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ஒடிசாவில் நாளை மறுதினம் பைலின் புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புயலின் தாக்கம் தமிழகத்தில் மிகக் குறைவாகவே இருக்கும். எனினும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.