சோதனைச் சாவடியில் போலீஸார் வசூல் வேட்டை: கிராம மக்கள் சிவகங்கை எஸ்பியிடம் புகார்

சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் சோதனைச் சாவடியில் போலீஸார் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக அக்கிராம மக்கள் எஸ்.குணசேகரன் எம்எல்ஏ தலைமையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.துரையிடம் நேற்று புகார் மனு அளித்தனர்.

அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:

சிவகங்கை-திருப்பத்தூர் சாலையில் காஞ்சிரங்காலில் ஆறு மாதங்களாக போலீ்ஸ் சோதனைச் சாவடி செயல்படுகிறது. மக்கள் நடமாட்டம் உள்ள இப்பகுதியில், சோதனைச் சாவடியை கடந்துதான் காஞ்சிரங்கால் கிராமத்துக்கு செல்கின்றனர்.

குற்றச் செயல்களை ஈடுபடு வோரை பிடிக்கவும், குற்றச் செயல் களை தடுக்கவும் அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியில் போலீ ஸார் வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். சோதனைச் சாவடி அமைந்தது முதல் இந்நாள் வரை எந்தக் குற்றவாளிகளையும் பிடிக்கவில்லை.

இச்சோதனைச் சாவடியை காஞ்சிரங்காலில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். வசூல் வேட்டை நடத்தும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்