இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 41 பேரும் ராமேஸ்வரம் வந்தடைந்தனர். ஜுலை 5ம் தேதியன்று 21 மீனவர்களும் ஆகஸ்ட் 5ம் தேதியன்று 20 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். சர்வதேச கடல் எல்லையை கடந்து மீன் பிடித்ததாக அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைககப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த 25ம் தேதியன்று 41 மீனவர்களையும் விடுவித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து தமிழக மீனவர்கள் 41 பேரும் இன்று சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அங்கிருந்து மீனவர்கள் ராமேஸ்வரம் வந்தடைந்தனர்.