தமிழக மீனவர்கள் 76 பேரை விடுவிக்க ராஜபக்ச உத்தரவு: இன்று விடுதலையாக வாய்ப்பு

இலங்கை சிறையில் அடைக்கப் பட்டுள்ள தமிழக மீனவர்கள் 76 பேரை விடுதலை செய்ய அந்த நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று உத்தர விட்டார்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 76 பேரை அந்த நாட்டு கடற்படையினர் கைது செய்தனர்.

கடந்த 27-ம் தேதி ஐ.நா. சபையில் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்தபோது, தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தினார்.

இந்த நிலையில், இலங்கை திரும்பிய ராஜபக்ச, தமிழக மீனவர்கள் 76 பேரையும் விடுதலை செய்ய நேற்று உத்தர விட்டார். மீனவர்கள் 76 பேரும் இன்று நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு விடுவிக்கப் படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ள ராஜபக்சவுக்கு நன்றி தெரிவித்துள்ள ராமேசு வரம் மீனவர்கள், கடந்த 4 மாதங்களில் இலங்கை கடற்படை யினரால் பறிமுதல் செய்யப் பட்டுள்ள 80-க்கும் அதிகமான விசைப்படகுகளையும் விடு விக்க வேண்டும் என்று வலியுறுத் தியுள்ளனர்.

இலங்கை மீனவர்கள் கைது

இந்திய கடலோர காவல் படையின் வைபவ் என்ற ரோந்து கப்பல் நேற்று கன்னியாகுமரி கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 12 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடைய 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழக மீனவர்கள் 16 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடித் தளத்திலிருந்து திங்கள்கிழமை இரவு சென்று நடுக்கடலில் 3 படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை இலங்கையில் உள்ள காங்கேசன் கடற்படை தளத்துக்கு அழைத்துச் சென்றனர்.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள வெள்ளக்கோயிலைச் சேர்ந்த செல்வமணி, சந்தோஷ், பெருமாள்பேட்டையைச் சேர்ந்த பொன்னுக்குட்டி, ராசுக்கண்ணு, காசிராஜ், குட்டியாண்டியூரைச் சேர்ந்த தாமரை, மணிகண்டன் ஆகிய 7 மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். திங்கள்கிழமை இரவு மீன் பிடிக்கச் சென்ற இவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேசன் கடற்படை தளத்துக்கு கொண்டுசென்றுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE